பொன்னமராவதி, மார்ச் 11- பொன்னமராவதியில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) பொன்னமரா வதி ஹவுசிங் போர்டு கிளை துவங்கப்பட்டது. கிளைக் கூட்டத்திற்கு சரவணன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலி ஜின்னா, சிஐடியு ஆட்டோ சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஐயப்பன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பக்ருதீன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், தலைவராக யுவராஜ், துணைத்தலை வராக சரவணன், செயலாளராக ஜெயசீலன், பொருளா ளராக இப்ராஹிம், துணைச் செயலாளராக செல்வம் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.